மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, எந்த நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை- பன்னீர்செல்வம்

When Congress ruled in the middle, no good plans were implemented - Panneerselvam

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, எந்த நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.

அதேபோல்  தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அவர் பேசுகையில்,மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, எந்த நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

அதேபோல் 15 லட்சம் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்படுள்ளது, அவை அனைத்தும் கான்கீரிட் வீடுகளாக மாற்றப்படும்.தமிழகம் கடந்த 4 வருடங்களாக வேளாண்மையில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.