ஈ.வே.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயரை மாற்ற காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது…? மு.க.ஸ்டாலின்

ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது?
சென்னை பாரிஸ் முனையில் இருந்து பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் ஈ.வே.ரா.பெரியார் நெடுஞ்சாலை என பெயரிடப்பட்டிருந்தது. தற்போது அந்த சாலைக்கு Grand Western Trunk Road என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது? எஜமானர்கள் கால்பிடிக்கும் வேலையா? தந்தை பெரியார் பெயர் கேட்டாலே நடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா? உடனடியாக மாற்றிடுக! தாமதித்தால் மே.2-க்குப் பிறகு ஆணை வெளியாகும்!’ என பதிவிட்டுள்ளார்.
ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது?
எஜமானர்கள் கால்பிடிக்கும் வேலையா? தந்தை பெரியார் பெயர் கேட்டாலே நடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா?
உடனடியாக மாற்றிடுக!
தாமதித்தால் மே.2-க்குப் பிறகு ஆணை வெளியாகும்! pic.twitter.com/luDmTSD1YT
— M.K.Stalin (@mkstalin) April 13, 2021