ஆளுநருடன் சந்திப்பு ஏன்? – 97 பக்க ஊழல் புகார் பட்டியல் – மு.க ஸ்டாலின் விளக்கம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார் பட்டியலை வழங்கியுள்ளோம் என்று முக ஸ்டாலின் பேட்டி.

இன்று காலை 10 மணிக்கு மு.க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசவுள்ளனர். அப்போது தமிழக அரசின் சில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்டாலின் புகார் மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், ஆளுநர் சந்திப்பு முடிந்து முக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். அப்போது, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுவதாக ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம். அமைச்சர்கள் மீது அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆளுநரிடம் மனுவாக அளித்தோம்.

மேலும், 2018-ஆம் ஆண்டு ஊழல் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். முதல்வர், துணை முதல்வர் சொத்துக்களை வாங்கி குவித்தது குறித்து புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளோம். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று பேட்டியளித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

33 minutes ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

2 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

2 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

3 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

3 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

4 hours ago