தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார் பட்டியலை வழங்கியுள்ளோம் என்று முக ஸ்டாலின் பேட்டி.
இன்று காலை 10 மணிக்கு மு.க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசவுள்ளனர். அப்போது தமிழக அரசின் சில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்டாலின் புகார் மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், ஆளுநர் சந்திப்பு முடிந்து முக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். அப்போது, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுவதாக ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம். அமைச்சர்கள் மீது அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆளுநரிடம் மனுவாக அளித்தோம்.
மேலும், 2018-ஆம் ஆண்டு ஊழல் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். முதல்வர், துணை முதல்வர் சொத்துக்களை வாங்கி குவித்தது குறித்து புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளோம். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று பேட்டியளித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…