தமிழகத்தில் இன்று ( ஏப்ரல் 18ஆம் தேதி) மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இன்று தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் 19 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்களாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.விவரம் இதோ ..
ஆதார் அட்டை
பான் கார்டு
பாஸ்போர்ட்
ஓட்டுனர் உரிமம்
மருத்துவக்காப்பீடு மின்னணு அட்டை
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை
அரசு ஊழியர் அடையாள அட்டை
எம்.பி., எம்.எல்.ஏ அடையாள அட்டை
வங்கி மற்றும் தபால் நிலைய பாஸ்புக்
தேசிய மக்கள் தொகை பதிவீட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட மின்னணு அட்டை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்
பணி அட்டை
இதில் ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.