ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் – கூட்டுறவுத்துறை உத்தரவு.!

ration shop - tamil nadu

சென்னை: ரேஷன் கடைகளை குறிப்பிட்ட நேரத்தில் கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும் என, பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை சுட்டிக்காட்டிய கூட்டுறவுத்துறை, பணி நேரத்தில் ஒழுங்காக கடைகளை திறக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்