கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் 35 ஆயிரத்தை கடந்து உள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கொரனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி மூலம் தலைமைச் செயலகத்தை தூய்மை செய்யும் பணி நடைபெறவுள்ளதால்,இன்று மற்றும் நாளை தலைமைச் செயலகம் இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.