இந்தோனேசியாவின் அருகே அமைந்துள்ள மொலுக்கா கடலின் வடக்குப் பகுதியில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின்படி, இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
மொத்த பரப்பளவு 77,000 சதுர மைல்களைக் கொண்ட மொலுக்கா கடல் மேற்கில் இந்தோனேசிய தீவுகளான செலிப்ஸ், கிழக்கில் ஹல்மஹேரா மற்றும் கிழக்கில் எல்லையாக தெற்கே சூலா தீவுகள் உள்ளது.
unknown nodeஇந்த நிலநடுக்கம் 72 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் உறுதி செய்துள்ளது. முன்னதாக, வடக்கு மொலுக்காவில் இந்த ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் அப்பகுதி அதிர்ச்சியடைந்தது. டோபெலோவின் வடமேற்கே சுமார் 150 கிமீ (93 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.