ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத் தீ பருவங்கள் வரிசையில் தற்போதைய காட்டுத்தீயும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாட்டின் சில பகுதிகளில் கடும் வறட்சியும் நிலவி வருகிறது.ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் குறைந்தது 2 பேர் மரணம் அடைந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஒன்றிலிருந்து ஒரு சடலம் மீட்கப்பட்டதாகவும் சுவாசிக்க சிரமம் பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பெறும்போது மரணம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
unknown nodeமேலும் இருவரைக் காணவில்லை.சுமார் 100 வீடுகள் தீயில் கடும் சேதமடைந்தன. காட்டுத் தீயின் நிலை இன்று மேலும் மோசமடையலாம், இதனால் வனவிலங்குகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. என நியூ சவுத் வேல்ஸ் தீயணைப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு கடுமையான வறட்சி நிலவுகிறது.
unknown node