அண்டார்டிகாவில் உள்ள ஒரு தளத்திற்கு செல்லும் வழியில் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து 38 பேர் கொண்ட சிலி இராணுவ விமானம் காணாமல் போனது.
நேற்று மாலை தென் அமெரிக்காவில் உள்ள சிலி தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள ஜனாதிபதி எட்வர்டோ ஃப்ரீ மொன்டால்வா விமானத் தளத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது அப்போது சி -130 ஹெர்குலஸ் வகையைச் சேர்ந்த விமானம் சிலியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
unknown nodeunknown nodeஇந்த விமானத்தில் மொத்தமாக 38 பேர் பயணித்துள்ளனர். இதில் 17 பேர் குழு உறுப்பினர்கள் ,மீதமுள்ள 21 பயணிகள் என்பது குறிப்பிகிடத்தக்கது.மாயமான விமானத்தை தேடும் பணியில் சிலி மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.