துபாய் காவல்துறையினர் பயன்படுத்தும் சீனாவின் ஸ்மார்ட் தலைக்கவசம்.!

வெளியில் நடமாடும் நபரின்  உடல் வெப்பநிலையை கண்காணிக்க சீன நிறுவனம் தயாரித்துள்ள ஸ்மார்ட் தலைக்கவசத்தை துபாய் காவல்துறையினர் தற்போது உபயோகித்து வருகின்றனர்.

வெளியில் நடமாடும் நபரின்  உடல் வெப்பநிலையை கண்காணிக்க சீன நிறுவனம் தயாரித்துள்ள ஸ்மார்ட் தலைக்கவசத்தை துபாய் காவல்துறையினர் தற்போது உபயோகித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஊரடங்கு அமல்படுத்தப்படுவது, முகக்கவசம் கட்டாயமாக்கப்படுவது, சமூக இடைவெளி போன்ற நடவடிக்கைகள் போல, பொதுமக்களில் அதிக உடல் வெப்பத்தோடு இருப்பவர்களை கண்டறிய துபாய் அரசு காவலர்களுக்கு புது ஸ்மார்ட் தலைக்கவசத்தை வழங்கியுள்ளது.

unknown node

அந்த தலைக்கவசத்தை சீன நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த ஸ்மார்ட் தலைக்கவசம் மூலம் பொது வெளியில் நடமாடும் நபரின்  உடல் வெப்பநிலையை கண்காணிக்க முடியும். 5 மீட்டர் தொலைவில் இருப்பவரின் உடல் வெப்பநிலையை கணக்கிட முடியும். ஒரு நிமிடத்திற்கு 200 நபர்களின் உடல் வெப்பநிலையை கணக்கிட முடியும். உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் நபர்கள் பொதுவெளியில் இருந்தால் உடனே அலர்ட் செய்யப்படும் வகையில் இந்த ஸ்மார்ட் தலைக்கவசம் வடிவைக்கப்பட்டுள்ளது.