பரபரப்பு…28 பேருடன் சென்ற எண்ணெய் டேங்கர் கப்பலில் தீ விபத்து.. 3 பேர் மாயம்.!!

An oil tanker ship fire

மலேசியாவின் தெற்கு கடற்கரை பகுதியில் என்னை கப்பல் தீ பற்றி எரிந்தது

சீனாவில் இருந்து 28 ஊழியர்களுடன் மலேசியாவிற்கு சென்று கொண்டிருந்த  எண்ணெய் டேங்கர் கப்பலில் திடீரென தீ பற்றி எரிந்தது. மலேசியாவின் தெற்கு கடற்கரை பகுதிக்கு வந்த போது கப்பல் முழுவதும் பரவியது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மீட்பு படை குழுவினர்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள், கப்பலுக்கு அருகில் இருந்த இரண்டு படகுகள், தீ விபத்து சம்பவத்திற்குப் பிறகு தண்ணீரில் குதித்த 23 பணியாளர்களை உயிருடன் மீட்டனர்.  ஆனாலும் இதில் மூன்று பேர் மயமாக்கினார்கள். அவர்களை தேடும் பணியில் மீண்டும் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

திடீரென கப்பல் தீ பிடித்து எரிந்ததால் பெரிய கறுப்புப் புகைகள் காற்றில் எழுந்தது. இதனால் அப்பகுதி கரும்புகையால் சூழப்பட்டு இருந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த கப்பல் 1997-ம் ஆண்டு கட்டப்பட்ட பாப்லோ என்ற கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir