வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்க்கு கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அந்நாட்டு முன்னாள் அதிபரின் ஆலோசகர் சாங் சாங்- மின் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக வடகொரிய அதிபர் கிம் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அவரின் உடல்நிலை தற்பொழுது கவலைக்கிடத்தில் உள்ளதாகவும் பல செய்திகள் வெளியானது. மேலும் அதிபர் கிம் ஜாங் உன், அவரின் ஆட்சி அதிகாரத்தை அவரின் தங்கையிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், அவரின் தங்கை ஆட்சியை நிர்வகித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில் அதிபர் கிம்மின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியான நிலையில், அந்நாட்டு முன்னாள் அதிபரின் ஆலோசகரான சாங் சாங்- மின் கூறுகையில், அதிபர் கிம் அவரின் தங்கையிடம் ஆட்சியை ஒப்படைத்தது, அவருக்கு உடல்நலக்குறைவு இருப்பதாக காட்டுவதாகவும், அவர் கோமா நிலையில் இருப்பதாகவும், ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது உறுதிப்படுத்தவில்லை என கூறினார்.