பாகிஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்தால் 16 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி நகரின்  ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி நகரின்  ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகர் பகுதியில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலையில் சற்றும் எதிர்பாராவண்ணம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

இன்னும் 4 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட முடியவில்லை. அதேபோல் இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் 18 வயது முதல் 38 வயதிற்குட்பட்ட இளம் வயதினர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்தால் 16 பேர் உயிரிழப்பு..!