ஓசானியா:பப்புவா நியூ கினியாவின், நியூ பிரிட்டனில் உள்ள கண்டிரியன் பகுதியில் சற்று முன் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் 55.7 கிலோமீட்டர் (35 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
unknown nodeஇதற்கிடையில், இந்த மாத தொடக்கத்தில் பப்புவா நியூ கினியாவின் தொலைதூரப் பகுதியில் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர், 300 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தது. முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 21 பேர் உயிரிழந்தனர் குறிப்பிடத்தக்கது.