இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் நேரில் கலந்து கொள்ளவில்லை – ரஷ்ய அதிபர்

vladimir putin

இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரில் கலந்துகொள்ளத் திட்டமிடவில்லை என்று கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்த பிரிக்ஸ் மாநாட்டில் காணொளி மூலம் வழியாகவே பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிலும் புதின் காணொலி வாயிலாக பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லியில் இந்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் அடுத்த ஜி 20 தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.  உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நாட்டிலுள்ள 56 நகரங்களில் 215 செயற்குழுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. டெல்லியில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டின் முடிவில் ஜி20 தலைவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai