பெண்களுக்கு இனி வாட்ஸ்அப்பில் ‘Heart’ அனுப்பினால் ஜெயில் தான்!

குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரண்டு இஸ்லாமிய நாடுகளில், இப்போது, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு இதய ஈமோஜியை (Heart) அனுப்பினால், இனி 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இரு நாட்டு அரசுகளும் ஒரு புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளனர்.
கடந்த ஜூலை 30-ம் தேதி குவைத் வழக்கறிஞர் ஹயா அல்-ஷல்ஹியின் கூற்றுப்படி, இந்த குற்றத்திற்காக குற்றவாளிக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 2000 தினார் இந்திய மதிப்பில் (ரூ.5,35,584) அபராதம் விதிக்கப்படும்.
இதேபோல், சவுதி சைபர் கிரைம் நிபுணரின் கூற்றுப்படி, வாட்ஸ்அப்பில் சிவப்பு இதயங்களை அனுப்புவது துன்புறுத்தலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், அங்கு வாட்ஸ்அப்பில் ‘ரெட் ஹார்ட்’ எமோஜிகளை அனுப்பினால், இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ. 1 லட்சம் ரியால் அதாவது இந்திய மதிப்பில் (21,92,588) அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சவுதி அரேபியாவில், யாராவது மீண்டும் மீண்டும் இந்த குற்றத்தை செய்தால், ஐந்து ஆண்டுகள் தண்டனையும், அபராதம் 3 லட்சம் ரியால் அதாவது இந்திய மதிப்பில் (66 லட்சம்) அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025