இங்கிலாந்து புதிய மன்னராக சார்லஸ் பதவிஏற்பு.! இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி பங்கேற்பு.!

Charles III

இங்கிலாந்து புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டி கொள்ளும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பிறகு, இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று உலகத்தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அரச குடும்பத்தினர் முன்னிலையில் முடி சூட்டி வருகிறார். அவரது மனைவி கமிலாவி ராணியாக முடிசூட்டி கொள்கிறார்.

இன்று லண்டனில் பிரமாண்ட முறையில்  இந்த விழா நடைபெற்று வருகிறது. இதில் உலக நாடுகளில் இருந்து அந்தந்த நாட்டின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில், இந்தியா சார்பில் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் கலந்து கொண்டுள்ளார்.

பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து, மூன்றாம் சார்லஸ் தங்க சாரட் வண்டியில்  வேஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். தேவாலயத்தில் அவர் இங்கிலாந்து மன்னராக முடிசூட்டி கொள்ள உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்