திடீரென பதவியை ராஜினாமா செய்த நெதர்லாந்து பிரதமர்.!

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அந்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், புலம்பெயர்ந்தோர் மசோதா விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டதையடுத்து மார்க் ரூட் ராஜினாமா முடிவை அறிவித்தார்.
தற்போது, பிரதமர் மார்க் ரூட்டே ராஜினாமா செய்திருப்பது 150 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஆளும் கூட்டணி தேர்வு செய்யப்படும் வரை ரூட்டே மற்றும் அவரது கூட்டணிகள் தற்காலிக பதவியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா முழுவதும் இடம்பெயர்தல் பிரச்சினைகள் அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல்களின் முக்கிய கருப்பொருளாக இருக்கும். ஐரோப்பாவிலும், மற்ற இடங்களிலும் இடம்பெயர்வு சிக்கல்கள் பேசும் பொருளாக மாறியுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025