விமானத்தின் றெக்கையில் அமர்ந்து பயணம் செய்ததை நாம் கார்டூனில் தான் பார்த்திருக்கிறோம். அனால் நிஜத்தில் நடந்தது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆமாம் அப்படி ஒரு சம்பவம் நைஜீரியாவில் உள்ள லாகோஸ் சர்வதேச விமான நிலையத்தில் நடந்தது.
அப்பொழுது, அங்கிருந்து புறப்பட தயாராக இருந்த அஸ்மான் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று கடத்த வெள்ளியன்று புறப்பட தயாராக ஓடுபாதையில் நின்றுகொண்டிருந்தது.
ஓடுபாதையில் நின்றுகொண்டிருந்த விமானம், கட்டுப்பாட்டின் அறையின் சிக்னலுக்காக காத்திருந்தது. அப்பொழுது விமானத்தில் இருந்த பயணி ஒருவர், இதர்ச்சியாக ஜன்னல் வழியாக பார்த்தபோது, விமான றெக்கையில் நின்றபடி ஒருவர் இருந்தார். அவரை பார்த்து பயங்கரவாதி என மக்கள் பயந்தனர்.
unknown nodeஉடனே விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விமானத்தின் என்ஜினை அணைத்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அந்த விமானத்தை நோக்கி விரைந்த காவல் அதிகாரிகள், அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.