ஜம்மு காஷ்மீரில் ஆனந்த்நாக் மற்றும் குல்காம் பகுதிகளில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆனந்த்நாக் மற்றும் குல்காம் பகுதிகளில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து அப்பகுதியில் சுற்றி வளைத்து பாதுகாப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகளில் 4 பேர் இதுவரை அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களில் 2 பேர் பாகிஸ்தானை சார்ந்தவர்களும், 2 பேர் உள்ளூர் பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற 02 பயங்கரவாதிகளின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node