சட்டமன்ற தேர்தல் – பாமக இன்று அவசர ஆலோசனை.!

An emergency consultation meeting will be held today in the presence of pmk a founder Ramdas ahead of the assembly elections.

சட்டமன்ற தேர்தலையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. அதிமுக கூட்டணியில் முதலில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேச பட்டியலையும் பாமக அதிமுகவுடன் கொடுத்திருந்தது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி பாமக இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுகவுடன் எந்தெந்த தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், காணொலி மூலம் அவசர  ஆலோசனை நடைபெறும் என பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.