#Breaking:பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு காரணம் இதுதான் – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு

இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில்,கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்தது போன்று,தமிழகம் தெலுங்கானா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை.இதன்காரணமாகவே பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக,மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்காமல் குடிமக்களை கூடுதல் சிரமத்திற்கு மாநில அரசுகள் ஆளாக்குகின்றன என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும்,நமது நாட்டில் வயது வந்தோரில்  96% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதும், 15 வயதுக்கு மேற்பட்ட தகுதியான மக்களில் 85% பேருக்கு இரண்டாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டதும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமையளிக்கும் விஷயம் எனவும்,6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளை முதல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும்,அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனா பரவலைக் குறைக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.