சிசிடிவி, ஜிபிஆர்எஸ் இருந்தால் தான் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று – அலுவலர் முனுசாமி

Erode Kopi Chettipalayam Regional Transport Officer Munusamy advised that school vehicles will be certified only if they have CCTV and GPRS.

சிசிடிவி, ஜிபிஆர்எஸ் இருந்தால் தான் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று கொடுக்கப்படும் என ஈரோடு கோபி செட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார்.

பள்ளி வாகனங்களில் செல்லக் கூடிய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிசிடிவி கேமராக்கள், ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள ஈரோடு கோபி செட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி அவர்கள் சிசிடிவி, ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தால் தான் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்கப்படும் என அறிவுறுத்தி உள்ளார்.