முதல்வர் மு.க.ஸ்டாலின் அறநிலைதுறை ஆலோசனை கூட்டங்களுக்கு தலைமை வகிக்க தடைவிதிக்க கோரியவர் 5 ஆண்டுகள் பொதுநல வழக்குகளை தொடர தடை.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாத்திகர் என்பதால் அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டங்களுக்கு தலைமை வகிக்க தடை விதிக்க வேண்டும். இந்து மதத்தைப் பின்பற்றுவதாக இந்து கடவுள் முன் உறுதிமொழி எடுத்த பிறகே இக்கூட்டங்களுக்குத் தலைமை வகிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு,மனுதாரர் 5 ஆண்டுகளுக்குபொதுநலவழக்குகள் தாக்கல் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.