அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்திற்கு பிரதமர் மோடி வருகை புரிந்தது என்பது தற்பெருமையின் உச்சம் என காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 4வது டெஸ்ட் தொடர் போட்டி தொடங்கியுள்ளது. இதில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.
ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் மோடி :
unknown nodeஇந்த போட்டியை காண பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் போட்டியை தொடங்கி வைத்துவிட்டு, சிறுது நேரம் கிரிக்கெட் போட்டியை ரசித்துவிட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.
தற்பெருமையின் உச்சம் :
unknown nodeநரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கு பிரதமர் மோடி வந்தது குறித்து காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், உங்கள் சொந்த வாழ்நாளில் உங்கள் பெயரை கொண்ட மைதானத்தில் சென்று அங்கு நடக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவது என்பது, தற்பெருமையின் உச்சம். என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.