கொரோனா தடுப்பு பணி ! தொகுதி நிதியிலிருந்து முதல்கட்டமாக ரூ.3 கோடி வழங்குவதாக அன்புமணி அறிவிப்பு

கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவ ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்வதாக அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவ ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்வதாக அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொரோனா  வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும்  21 நாட்களுக்கு  ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார்.மேலும் கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

unknown node

இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், தமிழக அரசின் நோய்த்தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல்கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன். தேவையைப் பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.