முனைவர் பரசுராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ட்வீட்.
Tata Institute of Social Sciences கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த, முனைவர் பரசுராமன் அவர்கள் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த ட்வீட்டர் பதிவில், ‘கோவில்பட்டியில் எளிய குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பெருமைமிகு கல்வி நிறுவனமான Tata Institute of Social Sciences-இன் தலைமைப் பொறுப்பில் 14 ஆண்டுகள் பணியாற்றியவரும், மிகுந்த சமூக ஈடுபாடு கொண்டவருமான முனைவர் பரசுராமன் அவர்களின் மறைவால் வேதனையடைகிறேன். குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node