பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கடந்ததினங்களுக்கு முன் தனது பணியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அண்ணாமலை ,பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ்,தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு துணைத் தலைவர் பதவி வழங்குவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.
unknown node