மருத்துவமனையில் கி.வீரமணி...! – சீமான் ட்வீட்

இதுகுறித்து சீமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், 'திராவிடர் கழகத்தலைவர் ஐயா கி.வீரமணி அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்

திராவிடர் கழகத்தலைவர் ஐயா கி.வீரமணி, முழு உடல்நலம்பெற்று மீண்டுவந்து, பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.

சென்னை : கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்றானது உலகையே  ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், திராவிட கழகத் தலைவரான கி.வீரமணி மற்றும் அவரது மனைவி மேனகாவுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சென்னையில் தனியார் மருத்துவமனையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் அவரது மனைவி மேனகாவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிய அளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சீமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திராவிடர் கழகத்தலைவர் ஐயா கி.வீரமணி அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்தேன். அவர் முழு உடல்நலம்பெற்று மீண்டுவந்து, பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node