ஸ்டெர்லைட் ஆலை வழக்கு- விசாரணை ஒத்திவைப்பு..!

கடந்த நவம்பரில் வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவில் ஆலையில் உள்ள இயந்திர உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலையில் உள்ளதால் ஆலை

கடந்த நவம்பரில் வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவில் ஆலையில் உள்ள இயந்திர உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலையில் உள்ளதால் ஆலை பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தமிழக அரசு ஸ்டெர்லைட் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கிடையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு இரண்டு முறை பட்டியலிடப்பட்டும் விசாரிக்கப்படவில்லை எனவே வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, நீதிபதிகள் வரும் மார்ச் 15-ம் தேதி (அதாவது இன்று) வழக்கு கட்டாயம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த 2-ஆம் தேதி தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது வேதாந்தா மேல்முறையீட்டு மனு விசாரணையை மார்ச் 22-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது.