#BREAKING: நாளை முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் இயங்கும்..!

Tasmag has given permission to open the store only from 8 am to 12 noon from tomorrow.

நாளை முதல் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டும் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப்பரவலைக் கருத்தில் கொண்டு நாளை முதல் காலை 4.00 மணி முதல் 20.05.2021 காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் கடைகள் நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, மதுக்கடைகளுக்கு மட்டும் ஏன்..? எந்த வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை பலர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டும் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. தற்போது செயல்படும் 9 மணி நேரத்திற்கு பதில் இனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் கடையையை திறந்து இருக்க அனுமதி வழங்கபட்டுள்ளது.  தற்போது டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை திறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.