மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சுதந்திர போராட்ட வீரர் என். சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு புதியதாக உருவாக்கிய தகைசால் தமிழர் விருது முதலாவதாக சங்கரய்யாவுக்கு வழங்கப்படுகிறது. என்.சங்கரய்யாவுக்கு வரும் சுதந்திர தினத்தன்று 10 லட்ச ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. சமீபத்தில் என்.சங்கரய்யா தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node