இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
அதில் டென்லி மட்டும் 12 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹாஸ்ல்வுட் 4 , கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி112 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி 246 ரன்கள் குவித்தது. இதில் ஸ்டோக்ஸ் 3, ஆர்ச்சர் 2 விக்கெட்டையும் பறித்தனர்.
இதனை தொடர்ந்து 359 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் 300 ரன்களுக்கு மேல் அடிப்பது கடினம் என பலர் எண்ணினார்.
இந்நிலையில் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 7 ,ஜேசன் ராய் 8 ரன்னுடன் வெளியேறினர். அதன் பின்னர் ஜோ ரூட் , ஜோ டென்லி இருவரும் கைகோர்த்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். ஜோ ரூட் 77 , ஜோ டென்லி 50 ரன்களுடன் வெளியேற பின்னர் இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
அப்போது பென்ஸ்டாக் மற்றும் ஜாக் லீச் இருவர் மட்டுமே இருந்தன. லீட்சை மறுமுனையில் வைத்துக்கொண்டு பென் ஸ்டோக்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி இறுதியாக 125.4 ஓவரில் 362 ரன்கள் குவித்து.இங்கிலாந்து அணி மாபெரும் வெற்றி பெற்றது.
பென்ஸ்டாக் 135 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் தொடரில் 1 – 1 என சமநிலையில் இரு அணிகளும் உள்ளது.
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…