பெங்களூர் அணி 1 முறை கூட கோப்பையை வென்றது இல்லை – கௌதம் கம்பீர் விமர்சனம்..!

Gautam Gambhir has criticized the Bangalore team for not winning the trophy

பெங்களூர் அணி கோப்பையை வென்றது இல்லை என்று கௌதம் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.

14 வது சீசனுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்று இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில் இதனை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரரை கௌதம் கம்பீர் பெங்களூர் அணியை விமர்சனம் செய்து சில விஷயங்களை கூறியுள்ளார். இதில் கௌதம் கம்பீர் பேசியது ” பெங்களூர் அணியிடம் மிகச் சிறந்த வீரர்கள் உள்ளனர். நல்ல வலுவான அணியாக உள்ளது. பெங்களூர் அணியிடம்  பீட்டர்சன் தொடங்கி கிறிஸ் கெயில் வரை பலர் இருந்துள்ளனர் ஆனாலும் பெங்களூர் அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை.

பெங்களூர் அணி ஒரு போட்டியில் வெற்றிபெற்று விட்டால் 13 வருடமாக பேசிக் கொண்டே தான் இருக்கிறது பேசிக்கொள்ளாமல் களத்தில் இறங்கி வேண்டும் பேசுவதை விட்டுவிட்டு செயலில் இறங்க வேண்டும். இந்த முறை பெங்களூர் அணியில் அதிரடி ஆட்டக்காரரான கிளன் மேக்ஸ்வெல் இருக்கிறார்.  இதனால் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.