இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற பென்ஸ்டோக்ஸ் மற்றும் ஜாக் லீச் இருவரும் முக்கிய காரணம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்தது.
இதன் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற வேண்டும் என்றால் 76 ரன்கள் தேவை என்ற பரிதாப நிலையில் இருந்தது.அப்போது களத்தில் பென் ஸ்டோக்ஸ் , ஜாக் லீச் இருவரும் மட்டுமே இருந்தனர்.
பென் ஸ்டோக்ஸ் அடித்த சதத்தில் மூலம் இங்கிலாந்து அணி வெற்றி பாதைக்கு சென்றது. மேலும் பந்து வீச்சாளர் ஜாக் லீச் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் கடைசி விக்கெட்டுக்கு 76 ரன்கள் குவித்தனர்.
இப்போட்டியில் பந்து வீச்சாளர் ஜாக் லீச் விளையாடும் போது பலமுறை தனது கண்ணாடியை துடைத்து விளையாடியதால் ரசிகர்களின் கவனம் ஜாக் லீச் பக்கம் திரும்பியது.இதை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் போட்டி முடிந்த பிறகு தனது ட்விட்டரில ஒரு பதிவு பதிவிட்டார்.
unknown nodeஅதில் பந்து வீச்சாளர் ஜாக் லீச்சிற்க்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக கண்ணாடி வழங்க வேண்டும் என ஸ்பெக் சேவர்ஸ் இடம் கோரிக்கை வைத்தார்.
unknown nodeஇதற்கு ஆஷஸ் தொடரின் ஸ்பான்சரான ஸ்பெக் சேவர்ஸ் தனது ட்விட்டரில் ” ஜாக் லீச்சிற்க்கு வாழ்நாள் முழுவதும் கண்ணாடி வழங்குவதாக கூறினார்.