#Cricket Breaking: டக் அவுட் ஆன விராட் கோலி; தடுமாறும் இந்திய அணி – 59/3 (31)

The fourth and final Test between India and England is being played at the Narendra Modi Stadium in Ahmedabad.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நான்காவது மட்டுமே இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடந்து முடிந்துள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2 மற்றும் இங்கிலாந்து ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.நேற்று இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கடந்த டெஸ்ட்டை போல ஆக்ரோஷமாக வீசினர்.அக்ஸர் 4 விக்கெட்டும், அஸ்வின் 3 மற்றும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.நேற்று முதல் நாள் ஆட்டத்தில் களம் இறங்கிய இந்திய அணி 24/1 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து முதல் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் புஜாரா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்பு களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 8 பந்துகள் சந்தித்த நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் பென் ஃபோக்ஸ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இந்திய அணி 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது