உலகின் சிறந்த பேட்ஸ்மேன் இந்தியாவின் கோலி…. ஆஸ்திரேலிய முன்னால் கேப்டன் பேட்டி…

தனி தீவு கண்டமான ஆஸ்திரேலிய நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இயான் சேப்பல் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்தார். அப்போது அவர், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் என்றும், இந்த இந்தியா- ஆஸ்திரேலியா தொடர் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் அவர், கடந்த முறை இந்திய அணி தொடரை வென்றதால் நம்பிக்கையுடன் வருவார்கள். ஆனால் ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பதால் இந்த முறை இந்தியாவுக்கு கடினமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் என்றும், இந்திய அணி இவர்கள் இருவரையும் சீக்கிரம் வீழ்த்தினால் வெற்றி பெறலாம். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்றும், மூன்று வடிவிலான போட்டிகளிலும் இந்திய கேப்டன் விராட் கோலி ரன் குவித்து வரும் விதம் வியப்பூட்டுகிறது. தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் அவர் தான் என்று அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025