ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் எனவும், செப்டம்பர் 19 ஆம் தேதி ஐபிஎல் முதல் போட்டி தொடங்கும் எனவும் மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கமாக வருடாவருடம் கோடை காலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆனால், இந்தாண்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டன.
தற்போது, ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்த வாய்ப்பில்லை என்பதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்த ஐபிஎல் பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
முன்னதாக, போட்டிகள், செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 8ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும் என தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று மும்பையில், ஐபிஎல் நிர்வாக குழு ஆலோசனை மேற்கொண்டது. அந்த ஆலோசனை முடிவில்,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் எனவும், செப்டம்பர் 19 ஆம் தேதி ஐபிஎல் முதல் போட்டி தொடங்கும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும், வழக்கமாக இரவு 8 மணிக்கு தொடங்கும், ஐபிஎல் போட்டிகள், இரவு 7.30 மணிக்கு தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…