Virat Kohli - Faf Du Plessi [file image]
ஐபிஎல் 2025 : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்ததிலிருந்து அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு எதிர்பார்ப்பு கூடிவிட்டது. அதற்குக் காரணம் நடைபெறும் போகும் ஐபில் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கான புதிய விதிமுறைகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்குச் சமீபத்தில் இதற்கென ஒரு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
அதில் அவர்கள் பேசிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும் ஒரு சில தகவல்கள் மட்டும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணிகளுள் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வரும் முக்கிய வீரர்கள் ஒரு சிலரை அந்த அணியின் நிர்வாகம் நடைபெறப் போகும் இந்த மெகா ஏலத்தில் விடுவிக்க உள்ளதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.
ஆர்சிபி தக்க வைக்கப் போகும் வீரர்கள் :
இந்த 6 வீரர்களைத் தவிர மற்ற எல்லா வீரர்களையும் ஆர்சிபி விடுவிக்க உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக இந்த பட்டியலில் அணியின் தற்போதைய கேப்டனாக இருக்கும் டூ பிளெஸ்ஸி மற்றும் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான கேமரூன் க்ரீன் என முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை. இதனால் இருவரையும் பெங்களூரு அணியிலிருந்து விடுவிக்கலாம் எனத் தெரிகிறது.
மேலும், இதற்கு முன்னர் மும்பை அணியின் தற்போதைய கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா மும்பை அணியால் விடுவிக்க உள்ளதாகவும் அவரை பெங்களூரு அணி ஏலத்தில் வாங்க உள்ளதாகவும் ஒரு பேச்சு சமீபத்தில் பேசப்பட்டது. அதன்படி இந்த பட்டியலை ஒப்பிட்டுப் பார்க்கையில் ஒருவேளை அது உண்மையாக இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
இப்படி ஒரு நட்சத்திர ஆல் ரவுண்டரையும், ஒரு பேட்ஸ்மேனையும் விடுவிப்பதால் பெங்களூரு அணியால் அவர்களது வாலட்டை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதற்காகவே இந்த முக்கிய வீரர்களை விடுவிக்கலாம் எனத் தெரிகிறது. பெங்களூரு அணியின் கேப்டனாக டூ பிளெஸ்ஸி செயல் பட்ட இந்த 2 வருடமும் அணிக்குக் கோப்பை வாங்கி தர முடியவில்லை என்றாலும் ஒரு சிறப்பான கேப்டனாகவே செயலாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் ஒப்புதலுடன் இந்த…