சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடி வருகிறார் என்றே கூறலாம். முதல் போட்டியில் 92 ரன்களும், இரண்டாவது போட்டியில் 57 ரன்கள் எடுத்தும் இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் அதிகம் ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில், நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ருத்துராஜ் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் எடுத்து அரைசதம் விளாசினார். லக்னோ அணியின் பந்துவீச்சாளர் கிருஷ்ணப்ப கௌதம் வீசிய 5 -வது ஓவரில் ருத்துராஜ் சிக்ஸர் ஒன்றை விளாசினார்.
unknown nodeசிக்ஸருக்கு சென்றுகொண்டிருந்த அந்த பந்து வர் அடித்த ஒரு சிக்சர் பவுண்டரி எல்லை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் காரில் சென்று பந்து பட்டது. இதில் அந்த கார் சற்று சேதாரம் அடைந்தது. இதற்கான வீடியோகளும், புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.
unknown nodeஇந்த வீடியோவை பார்த்த பலரும் காரை பதம் பாத்துட்டீங்களே பாஸ் என நகைச்சுவைகயாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இந்த கார் ஐபிஎல்-ல் சிறப்பாக விளையாடும் சிறந்த வீரருக்கு பரிசாக வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.