இந்திய அணியின் சாதனை மற்றும் கூல் கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் மகேந்திர சிங் டோனி.இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் மற்றும் டி20 இரண்டு உலகக்கோப்பையை இவர் தலையிலான இந்திய அனி வென்று கொடுத்தது.இந்த பெருமை டோனியே சேரும். ஆனால் தற்போது விளையாடி வரும் இந்திய அணியில் இவருக்கு இடம் அளிக்கப்பட வில்லை.இதனிடேயே அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.இதனால் ரசிகர்ள் இந்திய அணியில் தோணி ஓரம் கட்டப்படுகிறார் என்று கொதித்தெழுந்தனர்.இந்நிலையில் தற்போது இந்திய விளையாடி வரும் டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் டோனியின் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.
unknown nodeஇந்நிலையில் கிரிக்கெட் ரடிகர்களிடையே பலத்த எதிர்ப்பு குரல்கள் எழுந்து வரும் நிலையில் இந்தியாவிற்கு முதன்முறையாக உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்த கபில் தேவ் இது குறித்து தெரிவித்துள்ளார்.அதில் தோனியிடம் 20 வயதில் எதிர்பார்த்ததை எப்போதும் எதிர்பார்க்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
unknown nodeஇதுகுறித்து கபில் தேவ் கூறுகையில் தோனி மிக அனுபவம் வாய்ந்த வீரர் அவருடைய அனுபவம் அணிக்கு உதவும் என்ற வகையில் இருந்தாலும் டோனியின் வேலை சரியானது.இதை ஒவ்வொருவரும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால் டோனிக்கு தற்போது வயது 20 இல்லை மேலும் மீண்டும் அவரால் 20 வயதிற்கு செல்ல முடியாது.ஆனால் அணிக்கு எவ்வளவு ஸ்கோரை அவரால் சேர்க்க முடியுமோ அதை அவர் செய்வார்.மேலும் தோனி அணிக்கு மிகப்பெரிய சொத்து.இதில் அவரது உடற்தகுதி மட்டுமே முக்கியமானது.கூறிய பின் அதிக போட்டிகளில் விளையாட தோணியை வாழ்த்துகிறேன்.
unknown nodeதோனி 20 வயதில் செய்ததை தற்போதும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானது. 20 வயதில் செய்ததை இப்போதும் செய்ய இயலாது’’ என்ற கப்பில் தேவ்வின் கருத்தால் கிரிக்கெட்டில் தோணியின் பயணம் நிறைவு பெறுகிறதா..? என்று கிரிக்கெட் விமர்சர்களிடையே கடும் வாதத்தையும் ரசிகர்ளிடையே கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU