அடக்கடவுளே..! 4 முறை 'கோல்டன் டக்'...தொடரும் சோகத்தில் இருந்து மீள்வாரா சூர்யா.?

சூர்யகுமார் யாதவ் கேட்ச் செய்ய முயலும் போது இடது கண்ணில் அடிபட்டு, பந்து சிக்ஸருக்கு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யகுமார் யாதவ் கேட்ச் செய்ய முயலும் போது இடது கண்ணில் அடிபட்டு, பந்து சிக்ஸருக்கு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2023: நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் கண்ணில் பந்து மோதியதால் காரணமாக காயம் அடைந்தார். 17 ஓவரில் டெல்லி வீரர் அக்சர் படேல் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது பந்தை வேகமாக சிக்ஸருக்கு அடித்தார். அப்போது அங்கு இருந்த  சூர்யகுமார்  கேட்ச்சை எடுக்கத் தயாராக இருந்தார்.

unknown node

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த பந்து சூர்யகுமார் யாதவின் கண்ணீல் மோதி பின்னாடி இருந்த சிக்ஸர் லைனை தொட்டது . இதனால் சூர்யகுமார் கடுமையான வலியில் கண்ணை பிடித்துக்கொண்டார். வலியால் துடுத்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

unknown node

அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது,  4-ஆவது விக்கெட்டுக்கில் களமிறங்கினார். ஆனால், அவர் பேட்டிங் செய்ய வந்த வேகத்தில் முகேஷ் குமார் ஓவரில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். நேற்று மட்டுமில்லை கடந்த சில மாதங்களாகவே சூர்யகுமார் யாதவின் பார்ம் கவலைக்கிடமாகவே இருக்கிறது.

unknown node

குறிப்பாக இதற்கு முன்பு கடந்த 6 இன்னிங்ஸ்களில்  4 முறை கோல்டன் டக் ஆகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தொடர்ந்து டக் அவுட் ஆனார். அதில் இருந்து ஐபிஎல் போட்டியிலாவது பார்முக்கு திரும்பி வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இதுவரை அவருக்கு மோசமான சீசனாக இந்த சீசன் தொடங்கியுள்ளது.

unknown node

ஆம், இந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக அவர் முதல் போட்டியில் 15, இரண்டாவது போட்டியில் 1, மூன்றாவது போட்டியில் 0 என்று ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் பெரிய அளவில் ஒரு சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. விரைவில் ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி காம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

unknown node