எங்கள் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள் – சஞ்சு சாம்சன்…!!

Default Image

கடந்த 5  போட்டிகளில் எங்களது பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். 

நேற்று  ஐபிஎல் தொடரின் 18 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.5 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6 வது இடத்திற்கு சென்றது.

இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய சஞ்சு சாம்சன் பேசியது ” கடந்த 5  போட்டிகளில் எங்களது பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள், அவர்களை நான் கேப்டன் செய்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி கிரிஸ் மோரிஸ் விளையாட்டை விரும்புவதை அவர் கண்ணில் பார்க்கலாம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நான் இன்று விளையாடியதாக உணர்கிறேன். இப்படி சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடுவதை நான் கடந்த சீசன் ஐபிஎல் தொடரில் கற்றுக்கொண்டேன் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து வெற்றிபேறவில்லை என்றால்  மோசமாக உணர்வீர்கள்” என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்