இந்தியா அணியுடன் விளையாடுவது ஒரு கடினமான போர் தான்.!

Default Image

டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியாவுடன் விளையாடுவது ஒரு கடினமான போர் தான் என்று பதிவு செய்துள்ளார். 

கொரனோ வைரஸ் காரணமாக உலகம் முழுவதும், ஊரடங்கு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் மேலும் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது, மேலும் இந்த நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார் என்று கூறலாம். 

இந்நிலையில் டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார் என்றே கூறலாம், மேலும் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார், அந்த பதிவில் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் நான் மீண்டும் எப்போது மைதானத்திற்கு சென்று விளையாடுவேன் என்று காத்திருக்கிறேன் , மேலும் இந்தியாவுடன் விளையாடுவது ஒரு கடினமான போர் தான் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்