உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன், தோனியின் ஓய்வு குறித்து மனைவி சாக்ஷியின் பதிவு.!

Default Image

சாதனைகளை படைத்த உங்களை நினைத்து பெருமைப்படுவதாக தோனியின் மனைவியான சாக்ஷி பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பகிர்ந்த பதிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார். இது குறித்து ரசிகர்கள் உட்பட பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தோனியின் மனைவி இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, நீங்கள் சாதித்ததை பற்றி நீங்கள் பெருமைப்பட வேண்டும். உங்களது சிறந்த பங்களிப்பை விளையாட்டிற்கு வழங்கியதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் படைத்த சாதனைகளுக்காக உங்களை குறித்து பெருமைப்படுகிறேன். நீங்கள் விரும்பும் இந்த விளையாட்டிலிருந்து விடைபெறும் போது நீங்கள் கண்ணீர் விட்டிருப்பீர்கள் என்று நான் நம்புவதாகவும், இனி உங்களுக்கு ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் மாயா ஏஞ்சலோவின் வரிகளான ‘நீங்கள் சொன்னதை மக்கள் மறந்துவிடுவார்கள், நீங்கள் செய்ததை மக்கள் மறந்துவிடுவார்கள், ஆனால் நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்