T20 World Cup 2021:"ஐசிசி டி-20 போட்டியின் நான்கு அரையிறுதி போட்டியாளர்கள் இவர்கள்தான்" – ஆகாஷ் சோப்ரா அசத்தல் அறிவிப்பு..!

T20 World Cup 2021: "These are the four semi-finalists of the ICC T20" - Akash Chopra

ஐசிசி டி 20 உலகக் கோப்பை(T20 World Cup 2021) போட்டிக்கான நான்கு அரையிறுதிப் போட்டியாளர்களை ஆகாஷ் சோப்ரா முன்னறிவித்துள்ளார்.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரராக வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா உலகளாவிய போட்டிக்கான நான்கு அரையிறுதிப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். மெகா ஐசிசி உலக கோப்பை போட்டிகள் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ளது.

unknown node

இந்நிலையில்,மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நான்கு அணிகள் கடைசி நான்கு இடங்களை பிடிக்கும் என்று சோப்ரா தெரிவித்துள்ளார்.. டிவிட்டரில் நடந்த கேள்வி-பதில் அமர்வின் போது, டி 20 உலகக் கோப்பைக்கான தனது அரையிறுதிப் போட்டியாளர்களைத் தேர்வு செய்யுமாறு ஒரு ரசிகர் கேட்டபோது அவர் இதனைக் கணித்தார்.

unknown nodeunknown node

அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், வருண் சக்கரவர்த்தி, மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய ஐந்து சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்ட இந்திய அணியா? என்று சோப்ராவிடம் மற்றொரு ரசிகர் கேட்க, சஹார் மற்றும் வருணுக்கு இடையே ஒரு டாஸ்-அப் இருக்கலாம் என்றும் ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் அணியில் உறுதியாக இருப்பதாகவும் சோப்ரா கணக்கிட்டார்.

unknown node

இதற்கிடையில், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் சூப்பர் 12 இன் குரூப் 1 இல் இடம் பெற்றுள்ளன, இந்தியாவும் பாகிஸ்தானும் குரூப் 2 இல் இடம் பெற்றுள்ளன.

unknown node

அதன்படி,அக்டோபர் 24 ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் போட்டியைத் தொடங்குகின்றன. இரு தரப்பினரும் வெற்றியைத் தொடங்க விரும்புகிறார்கள். இங்கிலாந்தில் 2019 ஐசிசி உலகக் கோப்பை போட்டியின் பின்னர் இரு அணிகளும் மோதிக் கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.