டி20 உலகக் கோப்பை அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி பந்து வீச்சு

டி20 உலகக் கோப்பையின் தொடக்க போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி  முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.போட்டியின் ஆடுகளம் பற்றி கேப்டன் ரோஹித்

டி20 உலகக் கோப்பையின் தொடக்க போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி  முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.போட்டியின் ஆடுகளம் பற்றி கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில்,

“நாங்கள் இதே போன்ற மைதானத்தில் நாம் ஏற்கனவே விளையாடியுள்ளோம், எனவே என்ன எதிர்பார்க்கலாம் என்பதில் கொஞ்சம் அனுபவம் உள்ளது. இது நாம்  பழகியதிலிருந்து சற்றே மாறுபட்டதாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதுவே விளையாட்டின் தன்மை,” என்று கூறினார்.

இப்போட்டியில் இந்திய அணியில்  நான்கு ஆல்-ரௌண்டர்களுடன் களமிறங்குகின்றனர்.

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோஹ்லி, ரிஷப பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஹார்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், கர்டிஸ் காம்பர், ஜார்ஜ் டாக்ரெல், காரெட் டெலானி, மார்க் அடைர், பர்ரி மெக்கார்த்தி, ஜோஷுவா லிட்டில், பெஞ்சமின் வைட்