இந்திய அணி தோற்பதற்கு இது தான் காரணம்- கங்குலி !

Default Image

நேற்று இந்திய அணியும் , இங்கிலாந்து அணியும் மோதியது. இப்போட்டி எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.

இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் எடுத்தது. பிறகு 338 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்து  306 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.

இப்போட்டியில்  இந்திய அணியின் தோல்வியை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி கருத்து ஒன்றை தெரிவித்தார். அதில் இந்திய அணி பவர் பிளே ஓவரில் வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்க கூடாது.

இந்திய அணியின் கேப்டன் கோலி , மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா இருவருமே இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.மேலும் நேற்றைய போட்டியில் மத்தியில் தோனி ,கேதர் விளையாடும் போது ஒரு ஓவருக்கு 13 ரன்கள் தேவை என்ற போது அவர்கள் விளையாடி சிங்கள் எடுத்ததும் ஒரு காரணம் என கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 09052025
India Pak War tensions
India Pakistan Tensions
schools shut
Jammu and Kashmir