ஐபிஎல் தொடரை செப்டம்பர் மாதத்தில் நடத்த அனுமதி கேட்போம் -அர்ஜுனா டி சில்வா..!!

Sri Lanka Cricket Board Executive Chairman Arjuna de Silva has said that they will definitely ask for permission to hold the IPL series in September.

ஐபிஎல் தொடரை கண்டிப்பாக செப்டம்பர் மாதத்தில் நடத்த அனுமதி கேட்போம் என்று இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாக தலைவர் அர்ஜுனா டி சில்வா தெரிவித்துள்ளார்.

14 வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 29 போட்டிகள் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும், சென்னையில் சார்ந்த இருவருக்கும் ஹைதராபாத் அணியை சேர்ந்த வீரர் விரித்திமான் சாஹா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீரர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை இங்கிலாந்து மைதானத்தில் நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாக தலைவர் அர்ஜுனா டி சில்வா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது ” செப்டம்பர் மாதத்தில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடந்த நங்கள் கண்டிப்பாக அனுமதி கேட்போம். போட்டியை ஐக்கிய அரபு அமீரகதில் நடத்த பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளதாக கேள்வி பட்டோம் .ஆனாலும் இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தால் அதை நிராகரிக்க எந்த காரணமும் இருக்க முடியாது. வருகின்ற ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை லங்கா பிரிமீயர் லீக்கை நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே ஐபிஎல் தொடரை செப்டம்பரில் நடத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தயாராக உள்ளோம்” என்றும் தெரிவித்துள்ளார்.