மரத்து மேல யாரு ? நம்ம அம்பையர் அனில் ! என்ன பன்றாரு பாரு

கொரோனோ வைரஸ்  தாக்கம் உலக நாடுகளுக்கு தன்  கொடூர முகத்தை காட்டி வருகிறது .இதுவரை 1,714,480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 103,789 பேர் உயிரிழந்துள்ளனர் .

கொரோனோ வைரஸ்  தாக்கம் உலக நாடுகளுக்கு தன்  கொடூர முகத்தை காட்டி வருகிறது .இதுவரை1,714,480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 103,789 பேர் உயிரிழந்துள்ளனர் .

கடந்த மாதம் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டி  முதல் டோக்கியோவில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டி வரை இந்த  கொடூர கொரோனோவுக்கு பயந்து நிறுத்தப்பட்டுள்ளது .இந்நிலையில் பிரபல கிரிக்கெட் நடுவரான அனில் சவுத்ரி மரத்தில் ஏறிக்கொண்டு போன் பேசும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது .

இதுகுறித்து  தெரிவித்துள்ள அனில் சவுத்ரி நான் என்  பழமையான கிராமத்தில் உள்ளேன் , இது டெல்லியில் இருந்து80கிமீ தூரத்தில் உள்ளது.இங்கு தொலைபேசியில் பேச முடியாது சரியாக நெட்வொர்க் கிடைக்காது .அவ்வாறு நெட்வொர்க் கிடைக்காத சமயத்தில் மரத்தில் ஏற வேண்டியுள்ளது எனக்கு ஐசிசி இணையதளத்தில் சில வேலைகள் செய்ய வேண்டியுள்ளது அவற்றை செய்வதற்கு இணையம் தேவை அது இங்கு கிடைக்காது என்று கூறியுள்ளார் .

unknown node